Month: October 2025
தென்னிலங்கையில் உயிருடன் வாழும் பெண்ணுக்கு வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்
மாத்தறையில் உயிருடன் இருக்கும் போதே இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதால், அடிப்படை சலுகைகள் கூட பெற முடியாத நிலையில் பெண் ஒருவர் உள்ளமை தெரிய வந்துள்ளது. அதுரலியவில் வசிக்கும் பேபிஹாமி என்ற பெண், கையில் இறப்புச் சான்றிதழுடன் பல நெருக்கடிகளுடன் வாழ்ந்து வருகிறார். வேணகம கிராம சேவையாளர் பிரிவின் மலுவாரால, அளுத்ஹேன என்ற கிராமத்தில் குறித்த பெண் வாழ்ந்து வருகின்றார். 63 வயதுடைய குறித்த பெண்ணின் இரண்டு பிள்ளைகள் திருமணமான பின்னர் சிறிய வீட்டில் தனியாக வசிக்கிறார். சுமார்
அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்! அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த பெஞ்சமின் நெதன்யாகு
அமெரிக்காவை தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணையை ஈரான் உருவாக்கிவருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, Ben Shapiro-வுடன் நடத்திய நேர்காணலிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஈரான் 8,000 கி.மீ. தூரம் செல்லக்கூடிய ICBM ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. மேலும், 3,000 கி.மீ. சேர்த்தால் அமெரிக்காவின் கிழக்கு கரையை அடைய முடியும்” என எச்சரித்துள்ளார். இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள அதிரடி தடை…! “அமெரிக்காவின் நியூயார்க், பாஸ்டன், வாஷிங்டன்,
விஜயின் காணொளி அழைப்பு.. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி
தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய், கரூரில் தனது பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினருடன் காணொளி அழைப்பின் மூலம் உரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய், இதுவரை குறைந்தது ஐந்து குடும்பங்களுடன் பேசியுள்ளதாக தவெக தரப்பினர் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த உரையாடலின் போது, விஜய் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியதாகவும் கரூர் நகருக்கு விரைவில் வருகை தந்து அனைவரையும் சந்திப்பதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகின்றது. திரைமறைவில் அரசியல் செய்யும் அநுர! கனவில்


